ஒரே நாளில் கண்ணீரோடு வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்! - உனக்கு என்னை அப்பானு கூப்பிட தோணுச்சுனா அப்பான்னு கூப்பிடு, சார்னு கூப்பிட தோணுச்சுனா சார்னு கூப்பிடு
[2024-10-07 14:58:37] Views:[339] பிக்பாஸ் 8 தமிழ் சீன ஆரம்பித்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த 24 மணிநேரத்தில் வெளியேறிய போட்டியாளர் தொடர்பில் தகவல் தற்போது ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளது.
மக்கள் மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெகு பிரபலமானது, இம்முறை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி உள்ளார். சீசன் 8 இல் ரவீந்தர் சந்திரசேகர் கலந்து கொண்ட நிலையில், இவரைத் தொடர்ந்து சாஞ்சனா நேமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, ஜெஃப்ரி, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், அர்னவ், பவித்ரா ஜனனி, அருண் பிரசாத், தார்ஷிகா, விஜே விஷால், முத்து குமரன், சௌந்தர்யா நஞ்சுட்டன், ஜாக்குலின், என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை ரூல்சும் புதுசாகவே உள்ளது. பொதுவாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் ஒரு வாரம், அல்லது இரண்டு வாரத்திற்கு பின்னரே நாமினேட் செய்து எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். ஒரே நாளில் வெளியேறிய நடிகை
ஆனால் இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்திலேயே மற்ற போட்டியாளர்கள் நேரடி நாமினேஷன் செய்து அதிலிருந்து ஒரு போட்டியாளர் 24 மணி நேரத்தில் வெளியே அனுப்பட்டுள்ளார்.
மகாராஜா' பட நடிகை சாச்சனா தான் , முதல் நாளே பிக் பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறி உள்ளமை உறுதியாகி உள்ளது. சாச்சனா விஜய் சேதுபதியுடன் 'மகாராஜா' படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர். எனவே இவருக்கு மட்டும் விஜய் சேதுபதி, உனக்கு என்னை அப்பானு கூப்பிட தோணுச்சுனா அப்பான்னு கூப்பிடு, சார்னு கூப்பிட தோணுச்சுனா சார்னு கூப்பிடு என சிறப்பு சலுகை கொடுத்தார்.