yarlathirady.com

தவறான பாதையில் பயணிக்கும் தாயக இளைஞர் யுவதிகள்!

[2024-12-23 12:17:31] Views:[54]

தாயக இளைஞர் யுவதிகள் பலர் தற்காலத்தில் தவறான பாதையொன்றை நோக்கி பயணிப்பதாக தோன்றுகிறது. கடந்த காலத்தில் தாய் மண்ணுக்காக தன்னுயிர் நீத்த இளைஞர் யுவதிகளுக்கு நேர் எதிரான மாறுபட்ட நடவடிக்கைகளுக்கும் கலாசாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கும் ஒரு தரப்பாகவே தற்போதைய தாயக இளைஞர் தரப்பினர் காணப்படுகின்றனர்.


போதைப்பொருள் பாவனை, கேளிக்கை விருந்துகள், பண்பாட்டை மீறும் அநாகரிக செயற்பாடுகள், இந்திய சினிமாத் துறை மோகத்திற்கு அடிமையாகுதல் , பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற விடயங்களில் தன்னை ஈடுபடுத்தி தன்னிலை இழந்து வருகின்றனர். கேளிக்கை விருந்துகளில் போதைமுற்றி சில சமயம் அடிதடி சண்டைகள் அரங்கேறுவதும் உண்டு. இவர்கள்தான் தாயகத்தின் எதிர்காலமா?


இவர்கள்தான் தாயகத்தை மாற்றப் போவதுபோல் இடையே அரசியல் ரீதியான உரிமை கோரி ஒரு சில நாடகப் போராட்டங்கள் வேறு.. இவர்களின் ஒரு சில செயற்பாடுகள் தாயகத்திற்காக தன் உயிர்நீர்த்த உண்மையான போராளி இளைஞர் யுவதிகளை கொச்சைப்படுத்துவதாக உள்ளது.


என்ன செய்தாலும் அவர்களின் உன்னத நிலையை இப்போது இருக்கும் இவர்களால் எட்டவே முடியாது. கடந்த காலத்தில் நமது இளைஞர்கள் உயிர் தியாகம் செய்தது எதற்காக? ஆவா குழுக்களை உருவாக்குவதற்காகவா ? போதைப்பொருள் பாவனைக்கு அடிமைகளாவதற்காகவா? கள்வர்களை உருவாக்குவதற்காகவா? சிந்தியுங்கள்.


போதைப்பொருள் பாவனையால் பல இளைஞர்கள் தங்களின் வாழ்வினை இழந்துள்ளனர் . இரவு கேளிக்கை விருந்துகளில் பெரும்பாலும் சாதாரணமாகவே போதைப் பொருள்கள் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன என்பது ஒரு சில தகவல்கள் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.


உயர் கல்வி மட்டும் போதாது யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் .எமது தாயகத்திற்கும் தாயக மக்களுக்கும் தேவையானவை எவை என்பதை சரியாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். அதனை உள்ளீர்த்தல் வேண்டும்.


எமது பண்பாட்டையும் நாகரிகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுவது எமது இளைஞர் யுவதிகளின் பொறுப்பாகும் .ஆனால் இன்று நிலைமை தலைகீழ் இந்திய கலாசாரத்திற்கு அடிமையாகி சமூக வலைதளங்களில் இந்தியர்களைப் போன்று தங்களையும் வெளிப்படுத்தி பிரபலப்படுத்திக் கொள்ள எந்தநிலைக்கு வேண்டுமானாலும் செல்ல இவர்கள் தயாராக இருக்கின்றார்கள்.


மாவீரர் தினம் மற்றும் முள்ளிவாய்க்கால் தினம் போன்ற நாட்களில் மாத்திரம் தாயகப் பற்றாளர்கள் போல தங்ளை காட்டிக் கொள்கிறார்கள்.


தாயகப் பற்று என்பது தாயகத்தில் தற்போதிருக்கும் அரசியல் தவிர்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணலே ஆகும். குறைந்தபட்சம் தாயகத்தில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளையாவது அப்புறப்படுத்த சிரமதானம் ஒன்றை ஏற்பாடு செய்யலாம். எமக்காக உயிர்நீத்த எமது உறவுகளின் கனவை நனவாக்க நல்வழியில் பயணிக்க வேண்டும். " சிறிலங்கா க்ளீன்" செயற்திட்டத்தைப் போன்று தாயகத்தை தூய்மைப்படுத்துவோம் என்பது போல ஒரு திட்டத்தை கொண்டுவரலாம்.


பல்கலைக்கழக மாணவர்களும் ஏனைய தேவையற்ற விடயங்களில் ஈடுபடுவதை தவிர்த்து பயனுள்ளவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளின் பின்னால் அணி சேர்வதை தவிர்த்து தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்குவோம்.போராட்டங்களில் இறங்கி புரட்சியாளர்களாக மாறுவதற்கு முன்னர் சமூக அக்கறையாளர்களாக முதலில் மாறவேண்டும்.இதுதான் காலத்தின் கட்டாயமும் ஆகும்.


அதனை நீங்கள் உணர வேண்டும். பிற சமூகங்களுக்கு மத்தியில் எமது சமூகமும் பெருமையுடன் வாழ செய்வது இன்றைய இளைஞர் யுவதிகளின் கடமையாகும். எனவே தேவையற்ற விடயங்களில் கவனத்தை சிதற விடாது நல்லதொரு இலக்கை நோக்கி பயணியுங்கள்.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.