நேபாளத்தில் நிலநடுக்கம் 35 பேர் உயிரிழப்பு! பலர் காயம்!!
[2025-01-07 15:44:20] Views:[112] நேபாள திபெத்தை எல்லை பகுதிகளை உலுக்கியுள்ள கடும் பூகம்பத்தினால் 35க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாள - சீன எல்லையில் திபெத் பகுதியில் மையம்கொண்டிருந்த இந்த பூகம்பத்தினால் பல கட்டிடங்கள் முற்றாக தரைமட்டமாகியுள்ளதாகவும் நேபாள மற்றும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
7.1 ரிக்டர் அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
திபெத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரான சிகட்சேயில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என சீன அமெரிக்க கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன.
சிகட்சோவை சுற்றியுள்ள டிங்கிரி கவுண்டியில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன, மூன்று நகரங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது.
அதேவேளை பூகம்பத்தின் அதிர்வுகளை இந்தியாவின் சில பகுதிகளில் உணரமுடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 68 பேர் காயமடைந்துள்ளதாகவும் திகாரிகள் தெரிவித்துள்ள அதேவேளை இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.