ஐ.சி.சி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான செய்தி..!!
[2025-02-11 09:11:24] Views:[134] 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 08 வருட இடைவெளிக்குப் பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியை நடத்தும் நாடு மற்றும் நடப்பு சாம்பியனாக, பாகிஸ்தான் தங்கள் பட்டத்தை தக்கவைக்க உலகின் சிறந்த ஏழு அணிகளுடன் போட்டியிடவுள்ளது.
போட்டியின் தொடக்க நிலைக்கு எட்டு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் மூன்று குழு நிலை போட்டிகளில் விளையாடும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை 2 பெரும் அணிகள் அரையிறுதி சுற்றிற்கு முன்னேறும்.
குழு A யில் பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளும், B குழுவில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும் உள்ளன.
போட்டியின் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், பெப்ரவரி 19 ஆம் திகதி கராச்சியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.