இயல்பு நிலைக்கு திரும்பிய நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்..!
[2025-02-15 21:55:08] Views:[147] செயலிழந்திருந்த நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் இயங்கும் நிலைக்குத் திரும்பியுள்ளன.
கடந்த 9 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தின் பாதுகாப்பு அமைப்பு செயற்பட்டதால், அதன் 3 மின் பிறப்பாக்கிகளும் செயலிழந்தன. இதனால் சுழட்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இருப்பினும் தற்போது இரண்டு மின் பிறப்பாக்கிகள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இவை 600 மெகாவாட் மின்சார திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தேவைப்பட்டால் மற்றைய மின் பிறப்பாக்கியைும் மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என்று வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.