ஒரு தொகை கேரள கஞ்சா யாழ். வடமராட்சியில் மீட்பு
[2025-03-04 19:10:35] Views:[123] இன்று (04) வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123 கிலோகிராம் கேரள கஞ்சா அதிகாலை மீட்கப்பட்டுள்ளது
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்புக்கு உள்ளாகியது.
இந்த தேடுதலின் போது 123 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.