போலி விசாவில் கனடா செல்ல முயன்ற 11 பேர் கைது!
[2025-03-25 12:39:15] Views:[117] போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற 11 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நேற்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளினால் இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் 11 பேரும் இலங்கையர்கள் எனவும், அவர்கள் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.