yarlathirady.com

குவைத் சிறைச்சாலைகளில் இருந்த கைதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்:

[2025-03-27 11:21:15] Views:[165]

இலங்கை - குவைத் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குவைத் நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கைதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட அவர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் 20 கைதிகள் இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இரு நாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டாவது கைதிகள் குழு இதுவாகும். கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி 32 கைதிகள் கொண்ட குழுவும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.