யாழில் மீட்கப்பட்ட இனந்தெரியாத சடலம்!
[2025-03-27 11:53:48] Views:[178] யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள வாய்க்காலில் இருந்தே குறித்த சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலத்தில் உள்ளவர் 70-75 வயது மதிக்கத்தக்கவர் எனவும், அவர் அந்தப் பகுதியை சேர்ந்தவர் இல்லை என்றும், யாசகம் பெறுபவராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அவரது சடலத்தை உறவினர்கள் யாராவது வந்து இனங்காணுமாறு தெரிவிக்கப்படுகிறது.