சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது..!
[2025-03-27 12:29:40] Views:[147] நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் இன்று காலை கடற்படையினரால் கைது செய்ப்பப்பட்டுள்ளனர் .
அவர்கள் பயணித்த மீனவ படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த அனைவரும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அழைத்துவரப்பட்டு, பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கைதான மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.