இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
[2025-03-29 09:35:52] Views:[107] இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேட்கொள்ளவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் தங்கியிருக்கும் போது, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாட்டில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைசாத்திட திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும் இந்திய வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவு செயலாளர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பல மூத்த அதிகாரிகள் இந்தியப் பிரதமருடன் இந்தப் பயணத்தில் பங்கேற்க உள்ளனர் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.