யாழில் பொலிஸாரிடம் சிக்கிய இளைஞர்!
[2025-04-11 10:57:57] Views:[146] போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த போதைபொருளுடன் யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து குறித்த இளைஞர் நேற்றிரவு (10) கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கைதான 19 வயதான குறித்த சந்தேக நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகளும் 465 கிராம் கஞ்சா கலந்த போதைபொருளும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.