சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நலன் கருதி புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
[2025-04-13 19:31:26] Views:[68] இன்று (13) புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நலன் கருதி மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
தற்போது பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன, ஆனால் முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது தற்போது பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டபட்டுள்ளது.
எனினும், இன்று (13) கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பக்கூடும் என்பதால், அவர்களின் தேவை கருதி போக்குவரத்து சேவைகளை வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.