அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து
[2025-04-14 19:14:54] Views:[30] நேற்று (13 ) 31 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார் ஒன்று வேன் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தின் போது வேனில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.