யாழில் பரபரப்பு! கடற்கரையிலிருந்து துப்பாக்கி மீட்பு!!
[2025-04-16 13:12:33] Views:[122] யாழ்ப்பாணம், குருநகர் கடற்கரையிலிருந்து T56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (15) இரவு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் போதே குறித்த துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி உக்கிய நிலையில் இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.