கிறிஸ்த தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் கைது! தனிப்பட்ட தகராறே காரணம்:
[2025-04-19 10:22:25] Views:[114] பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள நிலையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போது தேவாலயத்தின் உள்ளே எவரும் இருக்கவில்லை என்றும், தேவாலயகத்தின் யன்னல்களின் கண்ணாடிகள் மீதே துப்பாக்கி ரவைகள் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.
சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தேவாலயத்தின் மத போதகர் உடனான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.