கிளிநொச்சியில் கடும் மழை; வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூங்கியது!!
[2025-04-27 17:11:15] Views:[131] கிளிநொச்சியில் இன்றைய தினம் (27) மதியம் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு பல வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் பாதிப்புக்குள்ளாகியதாக கூறப்படுகிறது.
மேலும், வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளமையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ள நிலையில், வீடுகளுக்குள் சென்றுள்ள வெள்ள நீரை வெளியேற்ற முடியாது மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நகர் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள முறையற்ற மதில்கள் காரணமாக வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையில் வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.