இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்திலுள்ள 48 சுற்றுலாத் தலங்களுக்கு பூட்டு...!!
[2025-04-30 11:51:21] Views:[275] இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 48 சுற்றுலாத் தலங்களை மூட நேற்றைய மத்திய அரசினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 22 ஆம் திகதி பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அங்கு சென்றிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்களது திட்டங்களை இரத்து செய்து அவசரமாகத் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதன் காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளில் மேலும் விரிசலடைந்து வரும் நிலையில் சூல்பிள்ளை எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரிலுள்ள சுற்றுலாத் தலங்களில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்ட 48 சுற்றுலாத் தலங்களை மூட இந்திய மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.