யாழில் இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு..!
[2025-05-02 09:48:53] Views:[142] தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளன.
மேற்படி காணி விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத் அவர்களினால் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபனிடம் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.சி.சுதீஸ்னர் மற்றும் பருத்தித்துறை பிரதேதச செயலாளர் திரு.சி.சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேற்படி விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரங்கள்.
01.தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில்: காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் 15.13 ஏக்கர் அளவிலான மாங்கொல்லை எனும் கிராமம் விடுவிப்பு. இதன்மூலம் காங்கேசன்துறை மேற்கில் தனியார் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
02.வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் 20 ஏக்கர்அளவிலான ஒட்டகப்புலம் கிராமம் விடுவிப்பு.
03.பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 5.57 ஏக்கர்அளவிலான கற்கோவளம் கிராமம் விடுவிப்பு.
இன்றைய தினம் அப் பிரதேசத்தில் உள்ள கண்ணிவெடி தொடர்பான பரிசீலனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்படிற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்பட்ட காணிகளுக்குரிய உரிமையாளர்கள் தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் காணி அறிவித்துள்ளார்.