யாழில் ஆலயமொன்றில் மதம்பிடித்த யானையால் நடந்த துயர சம்பவம்..!
[2025-05-08 21:20:03] Views:[155] யாழ்ப்பாணம்-தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் யானை தாக்கிய நிலையில் 4 வயது குழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், தாவடி பகுதியில் குறித்த ஆலயத்தில் வருடாந்த திருவிழா நடைபெற்று வரும்நிலையில் திருவிழாவிற்கு யானை கொண்டுவரப்பட்டது.
இதன்போது யானைக்கு மதம் பிடித்துள்ளது. மதம் பிடித்த யானை தாக்கியதில் இரண்டு பெண்களும், ஒரு நான்கு வயது குழந்தையும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் பக்தர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.