பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!
[2025-05-22 19:49:45] Views:[116] இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு.
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற போது நேற்று (21) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பில் இருந்து வருகைதந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைதுசெய்யப்பட்டவர் இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை வரும் 27ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு 27ஆம் திகதி வரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு 27ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.