துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு.!
[2025-05-23 10:04:22] Views:[110] மன்னார் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை வீரர் ஒருவரின் சடலம் நேற்று (22) மீட்கப்பட்டுள்ளது.
மன்னார், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்படையினரின் கண்காணிப்பு காவலரணில் இருந்து குறித்த சடலம் கண்டுபிடக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த கடற்படை வீரர் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த முருங்கன் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், முதல் கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் மன்னார் மாவட்ட நீதிபதி வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியதை தொடர்ந்து சடலம் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.