தாய்நாடு திரும்பிய யாழ். குயில் பிரியங்கா!!
[2025-05-23 15:01:54] Views:[91] இந்தியாவின் விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பாடல் போட்டியில் பங்குபற்றிய யாழ். கொக்குவிலை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா தாய்நாடு திரும்பியுள்ளார்.
அவர் நேற்றைய தினம் (22) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது ஒன்றுகூடிய ஏராளமான மக்கள் அவருக்கு பொன்னாடை போர்த்து கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 போட்டியாளர்கள் தெரிவில் கலந்து கொண்டு அவரும் போட்டியில் உள்வாங்கப்பட்டிருந்தார்.
போட்டியில் பங்குபற்றி பிரியங்கா நடுவர்கள் உட்பட பலரது பாராட்டினையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில் அவரது பாடல் சுற்றானது நிறைவடைந்த நிலையில் அவர் நேற்றையதினம் மீண்டும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.