பொலிஸாரால் முறியடிப்பட்ட மரக்கடத்தல்.! 15 இலட்சம் பெறுமதியான மரக் குற்றிகள் மீட்பு!!
[2025-06-08 12:02:24] Views:[88] டிப்பர் வாகனத்தில் சல்லிக்கற்களுக்கு அடியில் சூட்சுமமான முறையில் காட்டுத்தேக்கு மரக்குற்றிகளை மறைத்து கடத்திய ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (07) மதியம் சாவகச்சேரி நகர்ப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு டிப்பர் வாகனத்தில் சல்லிக்கற்கள் ஏற்றிவருவதைப்போன்று மரக்குற்றிகளுக்கு மேலே சல்லிக்கற்களை போட்டு மிகவும் சூட்சுமமான முறையில் கடத்திவந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது சுமார் 15 இலட்சம் பெறுமதியான 18 காட்டுத்தேக்கு மரக்குற்றிகளை பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன், சாரதியையும் கைது செய்துள்ளனர்