கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் விழுந்த வேன்.!
[2025-06-10 11:54:10] Views:[118] வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று (10) காலை வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பகுதியை நோக்கி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் விழுந்துள்ளது.
சம்பவத்தில் வேனில் பயணித்தவர்கள் 12 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.