yarlathirady.com

மூன்று ஜாம்பவான்கள் இல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி.!

[2025-06-20 12:28:39] Views:[46]

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று ஜாம்பவான் வீரர்கள் இல்லாத இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இது இந்திய டெஸ்ட் அணியின் புதிய சகாப்தத்தின் துவக்கமாக அமைந்திருப்பதையே சுட்டிக்காட்டுகிறது.

ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூவரில் ஒருவராவது இந்த 14 ஆண்டுகளில் இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்று இருந்தனர்.

2011 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிதான் கடைசியாக விராட் கோலி, ரோஹித் சர்மா அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூவரில் ஒருவரும் விளையாடாத போட்டியாக இருந்தது.

அதன் பிறகு இந்திய அணி விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இவர்கள் மூவரில் ஒருவராவது பிளேயிங் லெவனில் இடம் பிடித்து ஆடி இருக்கின்றனர்.

2021 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அந்தக் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்று விளையாடி இருந்தார்.

அந்த வகையில், சுமார் 14 ஆண்டுகள் கழித்து இந்திய டெஸ்ட் அணியின் மூன்று ஜாம்பவான்களான விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூவரும் இல்லாத ஒரு இந்திய அணி இங்கிலாந்தில் விளையாட உள்ளது. இது நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும், இளம் வயதே ஆன சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களம் இறங்க உள்ளது. இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணி ஒரு புதிய சகாப்தத்தில் காலடி எடுத்து வைக்கிறது. மூத்த வீரர்கள் இல்லாத இந்திய அணி சாதிக்குமா? அல்லது தடுமாறுமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.