யாழ்.பல்கலைக்கழகத்தின் பொன் விழா கோலாகலமாக இடம்பெற்றது!
[2025-10-07 12:11:22] Views:[94] யாழ்.பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் நேற்றையதினம்(2025.10.06) பொன் விழா கொண்டாட்டங்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து,பொன்னகவைப் பெருவிழா காண்கிறது.
ஐம்பதாவது ஆண்டைக் கடந்திருக்கும் பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து பொன்விழா நிகழ்வு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. 09.00 மணிக்கு ஆரம்பமான பொன் விழா நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே. எல். வசந்தகுமார சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தனர் .