பல்கலை மாணவன் தந்தையின் தாக்குதலில் காயம்
[2025-03-05 12:03:59] Views:[87] நேற்று (04) மாலை பலாங்கொடை பிரதேசத்தில் தந்தையால் தாக்கப்பட்டு மகன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மகனே சம்பவத்தில் இவ்வாறு காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில்
மகன் வீட்டினுள் பாடவேலைத்திட்டங்களில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில் சந்தேக நபரான தந்தை தனது மகனின் தலையில் பொல்லால் தாக்கியுள்ளார். பின்னர், சந்தேக நபரான தந்தை தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று சுகயீனமடைந்துள்ளதாகவும் இதனையடுத்து, தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.