நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி இலங்கையில் மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல் தயாரிப்பு!
[2025-03-06 10:14:44] Views:[101] இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல், இலங்கையில் நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி, கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
சோமாலிய மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்காக Dhanusha Marine நிறுவனத்தினால் இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டது. இந்த மீன்பிடிக் கப்பல் தயாரிப்பானது உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் ஒரு விசேட திருப்புமுனையைக் குறிக்கிறது.