ஆனையிறவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர்கள்
[2025-03-07 19:40:15] Views:[89] இன்று(7) வடக்கு மாகாண பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனையிறவு உப்பளத்திற்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏனைய உப்பளமான குறிஞ்சா தீவு உப்பு பாத்தியிடும் இடம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஆகியவற்றையும் பார்வையிட்டனர். இவ் விஜயத்தின் போது பிரதியமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட பதில் செயலாளர் எஸ்.முரளிதரன், தேசிய உப்பு உற்பத்தி நிறுவன தலைவர் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.