yarlathirady.com

பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கட்டுநாயக்கவில் கைது!

[2025-03-10 10:46:30] Views:[172]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருடன் கனேடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்று (9) இரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

20 வயது சந்தேக நபர், இளங்கலை மாணவி என்றும் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுங்க அதிகாரிகள் அவரது பொதிகளை சோதனை செய்த போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 கிலோ 573 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளை கண்டுபிடித்தனர்.

சந்தேக நபர், மேலதிக விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைவதற்கு முன்பு, கனடாவின் டொராண்டோவிலிருந்து அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.