பெண் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை! கண்டித்து வேலை நிறுத்தம்;
[2025-03-12 12:00:25] Views:[76] அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று (11) அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அரச மருத்துவ அதிகாரிகள் இன்று (12) காலை 8 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.