yarlathirady.com

கிராம உத்தியோகத்தரை தாக்கிய பெண்கள் இருவர் கைது!

[2025-03-12 12:20:05] Views:[115]

கிளிநொச்சி, கரைச்சி பகுதியில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் கடந்த 08.03.2025 சர்வதேச மகளிர் தினத்தன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்;

அன்றைய தினம் உத்தியோகத்தரிடம் சென்ற நான்கு பெண்கள் தமது வதிவிடத்தை உறுதி செய்து தருமாறு கேட்ட போது கிராம சேவையாளர் உரிய சரியான ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண்கள் உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், உத்தியோகத்தர் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை அடுத்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.