பெண் மருத்துவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது!!
[2025-03-12 13:07:38] Views:[106] அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை அநுராதபுரம், கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் (10) அநுராதபுரம் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கான விடுதியில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் கத்தி முனையில் தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
சந்தேக நபரை தேடுவதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை கல்நேவ பிரதேசத்தில் வைத்து பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.