இந்திய கடற்பரப்பில் தத்தளித்த யாழ் மீனவர்கள்.! அருகில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் தீவிர விசாரணை;
[2025-03-20 11:44:47] Views:[109] இந்திய கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் இருவர் படகில் தத்தளிப்பதாக அந்நாட்டு மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களை மீட்டுள்ளனர்.
குறித்த கடற்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் காணப்பட்டமையினால் குறித்த மீனவர்களுக்கு அதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன்பிடி துறைமுகத்தில் அருகே கடலில் பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம், குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று எஞ்சின் பழுது காரணமாக கடலில் தத்தளித்த ஞானராஜ் மற்றும் பூலோக தாசன் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த மீனவர்கள் தத்தளித்த கடற்பகுதியில் ஒரு மூட்டையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் அவர்கள் இருவருக்கும், கஞ்சா பொட்டலங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது என்ற கோணத்தில் மரைன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.