yarlathirady.com

இந்திய கடற்பரப்பில் தத்தளித்த யாழ் மீனவர்கள்.! அருகில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் தீவிர விசாரணை;

[2025-03-20 11:44:47] Views:[141]

இந்திய கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் இருவர் படகில் தத்தளிப்பதாக அந்நாட்டு மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களை மீட்டுள்ளனர்.

குறித்த கடற்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் காணப்பட்டமையினால் குறித்த மீனவர்களுக்கு அதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன்பிடி துறைமுகத்தில் அருகே கடலில் பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம், குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று எஞ்சின் பழுது காரணமாக கடலில் தத்தளித்த ஞானராஜ் மற்றும் பூலோக தாசன் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த மீனவர்கள் தத்தளித்த கடற்பகுதியில் ஒரு மூட்டையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் அவர்கள் இருவருக்கும், கஞ்சா பொட்டலங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது என்ற கோணத்தில் மரைன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.