பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.
[2025-04-24 21:30:36] எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதட்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் 26 இலங்கையில் தேசிய துக்க தினமாக பிரகடனம்;
[2025-04-24 17:20:31] புனிதர் போப் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேர்தல் விதி மீறிய பெண் வேட்பாளர் கைது!
[2025-04-24 15:58:25] தேர்தல் சட்டங்களை மீறிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் 114 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!
[2025-04-24 10:22:46] உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் இதுவரை 114 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறித்த மாவட்டங்களினது தேர்தல் திணைக்கள பொருப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மஹிந்த - சந்தோஷ் ஜா இடையே தீடீர் சந்திப்பு!
[2025-04-24 09:32:56] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு, விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
பாரியளவு வீழ்ச்சியடைந்த முட்டையின் விலை!
[2025-04-23 22:16:10] தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையின் காரணமாக முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடல் வழியாக இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இருவர் கைது.!
[2025-04-23 21:52:37] இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் சூட்சுமமான முறையில் 8.5 கிலோகிராம் தங்கத்தை கடத்த முயன்ற மன்னார் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழில் ஆபத்தான பொருளை உடைமையில் வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது..!
[2025-04-23 21:50:50] அராலி வீதி, பொம்மைவெளி பகுதியில் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புனித போப் பிரான்சிஸ் சற்று முன் காலமானார்..!!
[2025-04-21 15:10:07] சற்று முன்னர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயதான போப் பிரான்சிஸ் வத்திக்கானில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
யாழில் அசம்பாவிதம்: இளைஞன் தாக்கியதில் மூதாட்டி பலி..!
[2025-04-20 21:52:42] யாழ். பருத்தித்துறையில் இன்றையதினம் வீடொன்றில் திருடச்சென்ற இளைஞன் தாக்கியதில் 69 வயதுடைய மூதாட்டி பலியாகியுள்ளார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுதல் தொடர்பான செய்தி..!
[2025-04-20 21:26:03] நடந்து முடிந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான தகவலை பரீட்சைகள் திணைக்களம் வெளியீட்டுள்ளது.
ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு புதிய ரயில் சேவைகள்..!
[2025-04-20 20:15:32] ஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் மேலதிக இரு ரயில் சேவைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இயக்குவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண்கள் மூவர் அதிரடி கைது...!!!
[2025-04-19 15:55:18] கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிறிஸ்த தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் கைது! தனிப்பட்ட தகராறே காரணம்:
[2025-04-19 10:22:25] பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள நிலையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!!
[2025-04-18 21:06:45] கொண்டாட்ட காலம் என்பதால் நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.
யாழில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!
[2025-04-18 20:35:41] யாழ்ப்பாணம், தட்டாதெரு சந்தியில் 52 கிராம் கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிற்று: தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
[2025-04-18 13:11:30] உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படையினரையும் உள்ளடக்கிய விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.